தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தின் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்தவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: அய்யன் திருவள்ளுவரின் 2055 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வாழும் வள்ளுவர் குல இளைஞர் நலச் சங்கத்தின் சார்பில், சமுதாய பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இச்சமுதாயத்தின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் 2024 ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. இவ்விழாவினை வாழும் வள்ளுவர் குலஇளைஞர் நலச்சங்கத்தின் தலைவர் ஓம்.பிரகாஷ், துணைத் தலைவர் கார்வேந்தன், செயலாளர் பிரபாகரன், துணைச் செயலாளர் மோகன், பொருளாளர் பிரகாஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...