ஆர்.பொன்னாபுரத்தில் தேனீக்கள் கொட்டியதில்முன்னோர் வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற 4 குழந்தைகள் உட்பட 34 பேர் காயம்

முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடு நடத்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பொங்கல் வைக்க தீ மூட்டியபோது, மரக்கிளையில் இருந்த தேனீ கூட்டிற்கு புகை பரவியது. அப்போது, தேனீக்கள் கலைந்து அங்கு இருந்துவர்களை கொட்டி தாக்கியுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் தை 1ம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று கூடி தங்களது உறவினர்களுடன் பொங்கலிட்டு தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடுகள் செய்வது வழக்கம்.

அதன்படி, இன்று 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் பொங்கல் வைத்துள்ளனர். அப்போது இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்திய தீயின் புகை அங்கு மரக்கிளையில் இருந்த தேனீ கூட்டில் பரவியதால் தேனீக்கள் கலைந்து அங்கு இருந்துவர்களை கொட்டி தாக்கியுள்ளது.



இதில் நான்கு குழந்தைகள் உட்பட 34 பேர் பாதிப்படைந்துள்ளனர். பின்பு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...