கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்தபடி, மாட்டு வண்டி ஒட்டி வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குபோட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


கோவை: கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குடும்பத்தினர் ஒன்றாக கலந்து கொண்ட இந்த விழாவில் அனைவரும் கூட்டாக இணைந்து புதுப்பானையில் பொங்கல் வைத்தனர்.



இந்த பொங்கல் விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வேட்டி சட்டை அணிந்தபடி மாட்டு வண்டியை ஒட்டியபடி வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என கூறி உற்சாகமாக கொண்டாடினர்.

இந்த பொங்கல் விழாவில் பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்குபோட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ் உட்பட பல்வேறு போட்டிகளும், பாரம்பரிய கலைகளான ஓயிரோட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.



இங்கு நடத்தப்பட்ட ஸ்லோ சைக்கிள் ரேஸில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வேட்டியை மடித்து கட்டியபடி கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினார். பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகளுடன் பொங்கல் விழா காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் களை கட்டியது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...