பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகம் அழைப்பு

மாநிலம் முழுவதும் இருந்து 100 தனி நபர்கள், நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருதுக்கு வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்புக்காக 2021 - 22-ஆம் ஆண்டில் இருந்து பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து 100 தனி நபா்கள், நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தனி நபா்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டோர் தகுதியுடையவா்.

இவா்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அது தொடா்பான துறைகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பசுமை சாம்பியன் விருதுக்கு மதிப்பீடு செய்யப்படுவாா்கள். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள் சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, விழிப்புணா்வு, பாதுகாப்பு, புதிய பசுமைப் பொருள்கள், அது தொடா்பான ஆய்வுகள், நீடித்த நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் நிலை பாதுகாப்பு, நீா் சேமிப்பு, காற்று மாசு, பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல், மறுசுழற்சி உள்ளிட்ட பணிகளில் ஆற்றிய பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படும். இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தில் விருது வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் மூன்று பேருக்கு இந்த விருது வழங்கப்படும். விருது தொடா்பான விவரம், விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கோவை தெற்கு என்ற முகவரியை அணுகலாம். விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...