கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் முறைகேடு குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம்

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் மற்றொருவர் முறைகேடு குற்றச்சாட்டில் இந்து அறநிலையத்துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து அறநிலையத்துறையினர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை முறைகேடுகள் நடைபெற்றதாக சி.கே.கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பின்னணியில் எடுக்கப்பட்டது.

விசாரணையில், உண்டியல் பணம் மற்றும் நன்கொடை வசூலில் முறையான கணக்கு இல்லாமை, அரசிடம் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்டல், கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதும், கையாடல் மூலம் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மதுக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 28 ஏக்கர் நிலம் ரூ.125 கோடி மதிப்பிலானது கோவில் பெயரில் இல்லாமல் இருந்தது மற்றும் இந்த சொத்துகள் மூலம் வருமானம் ஈட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபத்தை அன்னதான மண்டபம் என கணக்கு காட்டி, அதிலிருந்து வரும் வருவாயை கையாடல் செய்திருப்பதும் கண்டறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில், கோவிலின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள் மேலும் ஆழமாக விசாரிக்கப்பட உள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...