தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவின் சிறப்பாக கால்நடைகளின் சிறப்பை விளக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் ரேக்ளா வண்டியை மாணவிகள் ஓட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதுன், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-திருப்பூர் சாலையில் தனியார் கலை மற்றும் அறிவியல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில், மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்திருந்தனர்.

பசியைப் போக்கும் விவசாயிகளுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கரும்பு மற்றும் மண் பானையில் பொங்கலிட்டு வணங்கினர்.



இதைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள், வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து கோலமிட்டு மாணவிகள் அசத்தினர்.



கயிறு இழுத்தல், இசை நாற்காலி, உறியடித்தல் போன்ற போட்டிகளும், கும்மியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற இசை நிகழ்ச்சிகளும் கோலகலமாக நடைபெற்றது.



விழாவின் சிறப்பாக கால்நடைகளின் சிறப்பை விளக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் ரேக்ளா வண்டியை மாணவிகள் ஓட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதுன், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...