அவிநாசியில் மிகவும் பழமையான வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

அனுமன் ஜெயந்தி விழாவில் சிலம்பம், வாள் வீச்சு, நெருப்பு பந்து சுற்றுதல் மற்றும் களரி ஆகிய வீர விளையாட்டுகள் நடைபெற்றன. இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சுமார் 1200 வருடம் பழமையான ஸ்ரீ வியாஸ ராஜர் எனும் அரசரால் நிறுவப்பட்ட வீர ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்து பெற்று விளங்குகிறது. இங்கு வருடா வருடம் பக்தர்கள் மூலம் நடத்தபடுகின்ற அனுமன் ஜெயந்தி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நேற்று காலை மூலமந்திர ஹோமம், ஆராதனை நிகழ்ச்சியுடன் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சி துவங்கியது. அதைத்ததாடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை வில்லிபாரத தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதிகாலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.



தொடர்ந்து சுந்தரகாண்ட அனுமன் சிறப்பு சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை பக்தி பஜனைகள் நடைபெற்றது.



விழாவின் நிறைவாக, அழிந்து வரும் கிராமிய வீர விளையாட்டுகளை சிறுவர், சிறுமிகள், சிலம்ப விளையாட்டு வீரர்கள், பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட சிலம்பம், வாழ் வீச்சு, நெருப்பு பந்து சுற்றுதல் மற்றும் களரி ஆகிய வீர விளையாட்டுகள் நடைபெற்றது.



அதை தொடர்ந்து உற்சவர் ராமர் சீதை லட்சுமணன் சுமந்த அனுமன் திருவீதி உலா நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...