மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் அண்ணா சிலை அருகே திமுக அரசை கண்டித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை காப்பாற்ற தவறியதாக கூறும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை தமிழக அரசு எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும் என்றும், எச்சரிக்கை முன்னேற்பாடு நடவடிக்கைகளை சரியாக எடுத்து இருக்காத அரசை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு வராமல் அர்ஜுன் சம்பத் அவர் வந்த காரில் நிற்காமல் சென்று விட்டார்.

அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினரை தாராபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு வராமல் அர்ஜுன் சம்பத் அவர் வந்த காரில் நிற்காமல் சென்று விட்டார்.
அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினரை தாராபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.