பல்லடம் பணிமனையில் இருந்து 90 சதவீத பேருந்துகள் இயக்கம் - 17 பேருந்துகள் மட்டும் நிறுத்தம்

பல்லடம் பணிமனையில் பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என சுமார் 520 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 18 சங்கங்கள் பங்கேற்றுள்ளன.


திருப்பூர்: தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணம், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 96 மாத அக விலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.



அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிமனையில் பணிபுரியும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என சுமார் 520 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 18 சங்கங்கள் பங்கேற்றுள்ள நிலையில் பல்லடம் பேருந்து பணிமனையில் இருந்து இயங்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் 78 பேருந்துகளில் 57 பேருந்துகள் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை வைத்து இயக்கப்பட்டு வருவதாகவும், 17 பேருந்துகள் மட்டும் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பல்லடம் பணிமனையில் இருந்து சுமார் 90% பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுவதாகவும் பணிமனை மேலாளர் தெரிவித்துள்ளார்.



மேலும் பல்லடத்தில் இருந்து திருப்பூர், கோவை, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பொள்ளாச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பனியன் தொழிலாளர்கள் சிரமம் இன்றி பயணம் செய்கின்றனர்.

மேலும் பொங்கல் பண்டிகை நெருங்குவது ஒட்டி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து தங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...