பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி வெற்றி

கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கூடை பந்தாட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக நேஷனல் கூடை பந்தாட்ட கழகம் சார்பில், தாக்கூர் கோப்பை 26 ஆவது மாநில அளவிலான கூடை பந்து போட்டி பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 3ம் தேதி புதன் கிழமை தொடங்கியது.

இதில் சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கு பெற்று விளையாடின.



நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நேற்று இரவு நடைபெற்றது.



விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்ற கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...