வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவர் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, செயல் திறனைப் பகிர்ந்து கொள்ளுதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது போன்றவற்றில் இணைந்து செயல்படுவது என புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திராவில் அமைந்துள்ள முனைவர் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.01.2024 அன்று கோவையில் கையெழுத்தானது.

ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகமானது தோட்டக்கலையில் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் போன்றவற்றை திறம்பட நடத்திச் செல்லும் ஒரு அரசு பல்கலைக்கழகமாகும். தோட்டக்கலை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், பண்பகப்பண்ணையின் விதைகள், தொழில்நுட்பங்கள், தகவல் மற்றும் ஆராய்ச்சிமுறை, கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, செயல் திறனைப் பகிர்ந்து கொள்ளுதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது போன்றவற்றில் இணைந்து செயல்படுவது மற்றும் இதர அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி இந்த ஒப்பந்தம் உருவாக பெரிதும் துணைநின்றார். ஒய். எஸ். ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் டி.ஜானகிராம் அவர்கள் இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளைப் பற்றி கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இரா. தமிழ்வேந்தன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் பி.சீனிவாசலு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பெ.ஐரின் வேதமணி அவர்கள் இந்த ஒப்பந்தம் உருவாக அடித்தளமிட்டு செயல்படுத்தினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இயக்குனரத்தின் முதல்வர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...