முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் குளறுபடி - பொள்ளாச்சி ஒன்றிய கூட்டத்தில் புகார்

கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி தலைமையில் நடைபெற்றது.



இதில் கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலைகளை செப்பணிட வேண்டும் என்று பெரும்பாலான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது ஆச்சிபட்டி ஒன்றிய குழு உறுப்பினர் மாலினி பேசிய போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் கலந்து கொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. ஆச்சிபட்டி ஊராட்சியில் வசிக்கும் 11 பயனாளிகளை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் பெயர் பட்டியல் அனுப்பியது.

ஆனால் அந்த பட்டியலில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை என புகார் தெரிவித்தார். இது குறித்து மாலினி கூறும் போது தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாவட்ட நிர்வாகம் தரப்பில் வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்து அனுப்பப்பட்ட பட்டியலில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் பெயர் பட்டியல் இடம் பெற்றிருந்தது.



மாவட்ட நிர்வாகம் அனுப்பிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது நலத்திட்ட உதவிகளை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என தெரிவித்தார்கள். இது வேதனையாக உள்ளது. முதல்வர் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான பயனாளிகளை அதிகாரிகள் முறையாக தேர்வு செய்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...