கோவையில் 11 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 1,451 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி, 11 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: தகவல் நெகிழி என்று அழைக்கப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு, பாலித்தீன் கவர் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 1,451 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 11 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது என்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...