புத்தாண்டை வரவேற்க கோவையில் வானில் வண்ண கோலமிட்டு வர்ணஜாலம் செய்த லேசர் லைட் ஷோ

புத்தாண்டை வரவேற்கும் விதமாக ட்ரோன்கள் பறக்க விடப்பட்டு, டால்பின் உலா வருவது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டது. பின்னர், 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்தது என அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் அனைவரும் ஹேப்பி நியூ இயர் என முழங்கி புத்தாண்டை வரவேற்றனர்.


கோவை: உலகம் முழுவதும் 2024 ஆம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையிலே கோவையில் வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியது.



பொதுமக்களின் கண்களை கவரும் வகையில் லேசர் லைட்டுகள் பொருத்தப்பட்டு ஒளிர விடப்பட்டன.



வானில் வண்ணங்களை தீட்டி வர்ணஜாலம் செய்த லேசர் ஷோ, அங்கிருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.



அத்தோடு மட்டுமின்றி புத்தாண்டை வரவேற்கும் விதமாக ட்ரோன்கள் பறக்க விடப்பட்டு, டால்பின் உலா வருவது போன்ற காட்சிகளை வடிவமைத்து, 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்ததனை அறிவித்து, பொதுமக்களை குஷி படுத்தினர்.



வாலாங்குளத்தில் குளக்கரையில் குழுமியிருந்த பொதுமக்கள், ஹேப்பி நியூ இயர் என முழங்கி புத்தாண்டை உற்சாகமுடன் வரவேற்றனர். கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் தற்பொழுது கொரோனா பரவல் இருக்கின்ற நிலையில், நடப்பாண்டில் இவை அனைத்தும் இல்லாமல் பொதுமக்கள் நலமுடன் இருக்க வேண்டுமென பலர் தங்கள் விருப்பத்தினை தெரிவித்தனர்.

நாட்டின் வளர்ச்சியில், இந்த ஆண்டு பெரும் பங்காற்ற வேண்டும் என பலரும் தெரிவித்தனர். பெண்கள், ஆண்கள் என பலர், இந்த வருடம் என்ன ரெசல்யூஷன் என்பதையும், சுவாரசியுடன் தெரிவித்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...