புத்தாண்டை வரவேற்க கோவையில் வானில் வண்ண கோலமிட்டு வர்ணஜாலம் செய்த லேசர் லைட் ஷோ

புத்தாண்டை வரவேற்கும் விதமாக ட்ரோன்கள் பறக்க விடப்பட்டு, டால்பின் உலா வருவது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டது. பின்னர், 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்தது என அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் அனைவரும் ஹேப்பி நியூ இயர் என முழங்கி புத்தாண்டை வரவேற்றனர்.


கோவை: உலகம் முழுவதும் 2024 ஆம் ஆண்டு ஆங்கில வருட பிறப்பை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையிலே கோவையில் வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கலை கட்டியது.



பொதுமக்களின் கண்களை கவரும் வகையில் லேசர் லைட்டுகள் பொருத்தப்பட்டு ஒளிர விடப்பட்டன.



வானில் வண்ணங்களை தீட்டி வர்ணஜாலம் செய்த லேசர் ஷோ, அங்கிருந்த பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.



அத்தோடு மட்டுமின்றி புத்தாண்டை வரவேற்கும் விதமாக ட்ரோன்கள் பறக்க விடப்பட்டு, டால்பின் உலா வருவது போன்ற காட்சிகளை வடிவமைத்து, 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்ததனை அறிவித்து, பொதுமக்களை குஷி படுத்தினர்.



வாலாங்குளத்தில் குளக்கரையில் குழுமியிருந்த பொதுமக்கள், ஹேப்பி நியூ இயர் என முழங்கி புத்தாண்டை உற்சாகமுடன் வரவேற்றனர். கடந்த ஆண்டு வெள்ளம் மற்றும் தற்பொழுது கொரோனா பரவல் இருக்கின்ற நிலையில், நடப்பாண்டில் இவை அனைத்தும் இல்லாமல் பொதுமக்கள் நலமுடன் இருக்க வேண்டுமென பலர் தங்கள் விருப்பத்தினை தெரிவித்தனர்.

நாட்டின் வளர்ச்சியில், இந்த ஆண்டு பெரும் பங்காற்ற வேண்டும் என பலரும் தெரிவித்தனர். பெண்கள், ஆண்கள் என பலர், இந்த வருடம் என்ன ரெசல்யூஷன் என்பதையும், சுவாரசியுடன் தெரிவித்து புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...