உடுமலையில் பருவநிலை மாற்றம் சார்ந்த பயிற்சி - பெண் தொழில் முனைவோர் பங்கேற்பு

வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழிற் முனைவோருக்கு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

உடுமலை அடுத்த போடிபட்டி ஊராட்சியில் பருவநிலை மாற்றம் சார்ந்த பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. பயிற்சியை போடிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்தரராஜன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மகளிர் திட்டம் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மகளிர் கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தாராபுரம் இயக்குனர் குணசீலி வரவேற்புரை ஆற்றினார். இந்த பயிற்சியானது 3 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் நிகழ்வாக தொழில் முனைவோரின் திறன்கள், சந்தை ஆராய்ச்சி, ஒரு நிறுவனத்தின் சாத்தியம் உள்ளிட்ட பயிற்சி நடைபெற்றது. 2-வது நிகழ்வாக 23-ம் தேதி வியாழக்கிழமை வணிக திட்டம் தயாரித்தல், செலவு மற்றும் விலை, உற்பத்தியை திட்டமிடுதல், சந்தை மற்றும் சந்தைப்படுத்துதல் நடைமுறை சார்ந்த பயிற்சி நடைபெற உள்ளது.

3-வது நிகழ்வாக 25-ம் தேதி சனிக்கிழமை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் திட்டம், பணி மூலதன மேலாண்மை, பணப்புழக்கம், வணிக கணக்குகளை வைத்திருத்தல் தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தாராபுரம் ஐஸ்வர்யா நன்றி உரை கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...