தி.மு.க. இளைஞரணி வாகன பேரணி - தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி வரவேற்பு

மோட்டார் சைக்கிள் பேரணி வடதாரை வழியாக சின்னகடை வீதி, பூக்கடை கார்னர், அலங்கியம் ரவுண்டானா, உடுமலை ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் வழியாக அமராவதி ரவுண்டானா சென்று முடிந்தது.


திருப்பூர்: தாராபுரம் வந்த திமுக இளைஞரணி வாகன பேரணியில் வந்த திமுக தொண்டர்களை அமைச்சர் கயல்விழி சால்வை அணிவித்து வரவேற்று பழங்கள் வழங்கினார்.

சேலத்தில் நடக்கும் இளைஞரணி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தி.மு.க. இளைஞரணியினர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக தாராபுரம் வந்தனர்.



அவர்களுக்கு ஐ.டி.ஐ. கார்னரில் அமைச்சர் கயல்விழி சால்வை அணிவித்து வரவேற்று பழங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் மற்றும் நகர செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர்.



நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் பூங்கொத்து கொடுத்தார். பிறகு மோட்டார் சைக்கிள் பேரணி வடதாரை வழியாக சின்னகடை வீதி, பூக்கடை கார்னர், அலங்கியம் ரவுண்டானா, உடுமலை ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் வழியாக அமராவதி ரவுண்டானா சென்று முடிந்தது.



அப்போது மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, நகர அவைத் தலைவர் கதிரவன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஹைடெக் அன்பழகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகர நிர்வாகிகள், இளைஞரணி, தொண்டரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...