ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் அமைப்பு - மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் திறப்பு

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.


கோவை: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் தடையில்லா மின்சார வசதி, நிலத்தடி நீர் வசதி, ஆரம்ப சுகாதார நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட சுகாதாரத்திற்காக அரை ஏக்கர் பரப்பளவிற்கு சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் நிறுவப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) அருணா, மெஸ்ஸூரி கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மணி நாராயணன், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...