தாராபுரத்தில் அரசு டாக்டர் வீட்டில் 9 பவுன் நகை மாயம் - திருட்டு மூதாட்டிக்கு சிறைத்தண்டனை

தாராபுரத்தில் டாக்டர் வீட்டில் வேலைப் பார்த்துக்கொண்டு, ஒன்பது பவுன் நகைகளை திருடிச்சென்ற கஸ்தூரி என்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: வீட்டு வேலை பார்த்த டாக்டர் வீட்டிலேயே சிறிது சிறிதாக ஒன்பது பவுன் நகைகளை மூதாட்டி திருடி அடகு வைத்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த பொன் கார்த்திகேயன் மனைவி வித்யா. இவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டு வேலைக்கு தாராபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த ஞான பிரகாசம் மனைவி கஸ்தூரி (வயது58) என்பரை வீட்டு வேலைக்கு வைத்துள்ளார்.

இவர் தினசரி டாக்டர் வீட்டிற்கு சமையல் செய்வது மற்றும் துணிகளை துவைப்பது, வீட்டை பெருக்குவது போன்ற வீட்டு வேலைகளை செய்து வந்தார். தெரிந்த மூதாட்டி என்று நம்பி வீட்டை பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவார்கள்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கஸ்தூரி டாக்டர் வீட்டில் இருந்து சிறிது சிறிதாக நகைகளை திருடி சென்றுள்ளார். இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த வித்யா 9 பவுன் நகைகள் காணாமல் போனது குறித்து கஸ்தூரியிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதுகுறித்து வித்யா தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுததார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் பெண் போலீசார், கஸ்தூரியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது டாக்டர் வீட்டில் திருடப்பட்ட 9 பவுன் நகைகளை அடகு வைத்துள்ளதாக கூறி நகைளை திருடியதை ஒப்புக்கொண்டார்.



இது குறித்து போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து நகையை பறிமுதல் செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...