கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி யுவா 2026 இன் இரண்டாம் நாள் நிகழ்வாக நடைபெற்றது. MulticoreWare நிறுவனத்தின் சஷிகாந்த் ஜெயராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
Coimbatore: கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கான 27-வது ஆண்டு முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி "யுவா 2026 Freshmen Induction Programme Day - 2" நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் புதிய மாணவர்களுக்கான இந்த சிறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 8, 2026 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. R. வசந்தகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. P. கார்த்திகைக்குமார் முன்னிலை வகித்தார். காலை 10.30 மணிக்கு இறைவணக்கப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி குத்துவிளக்கேற்றும் நிகழ்வுடன் சிறப்புற நடைபெற்றது.
MulticoreWare Inc., சென்னை நிறுவனத்தின் தலைமை மனிதவள அலுவலர் சஷிகாந்த் ஜெயராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்களுக்கு தனது அனுபவங்களையும், தொழில்துறை எதிர்பார்ப்புகள், வேலைவாய்ப்புக்கான திறன்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கற்பகம் பொறியியல் கல்லூரியின் டீன் சோபியா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் Dr. P. மணிமாறன் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பலர் கலந்துகொண்டனர்.
கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. R. வசந்தகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. P. கார்த்திகைக்குமார் முன்னிலை வகித்தார். காலை 10.30 மணிக்கு இறைவணக்கப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி குத்துவிளக்கேற்றும் நிகழ்வுடன் சிறப்புற நடைபெற்றது.
MulticoreWare Inc., சென்னை நிறுவனத்தின் தலைமை மனிதவள அலுவலர் சஷிகாந்த் ஜெயராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்களுக்கு தனது அனுபவங்களையும், தொழில்துறை எதிர்பார்ப்புகள், வேலைவாய்ப்புக்கான திறன்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கற்பகம் பொறியியல் கல்லூரியின் டீன் சோபியா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கற்பகம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் Dr. P. மணிமாறன் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பலர் கலந்துகொண்டனர்.