கோவையில் மாநகர காவல் ஆணையர் தலைமையில்  போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்!

ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்ற போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுபடுத்துவதற்கான கூட்டத்தில் மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.


கோவை: மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனதலைமை ஆசிரியர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 145 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.முதலமைச்சர் கடந்த 2 ஆண்டுகளாக போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு குறித்து காவல்துறை மூலமாகவும். பல்வேறு துறைகளின் மூலமாகவும் துரித நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு, பல்வேறு துறைகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

பள்ளிகளில் உள்ள கழிவறைகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் இதர இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு. போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து ஆராய வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர்கள் எதிர்காலம் சிறக்கவும், அவர்கள் ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைக்கவும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, மாணவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பெற்றோர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். மேலும், போதை பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த கவுன்சிலிங் வழங்கவும். உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க காவல்துறையும் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் தயாராக உள்ளது.

இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவது குறித்து தயக்கமின்றி உண்மையான தகவல்களை காவல்துறைக்கு ஆசிரிய பெருமக்கள் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...