மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்தியகிரக போராட்டம்!

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்திய கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் ஓன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மேலும், மேடையின் முன்பு உப்பு பாக்கெட்டுகள் வைக்கபட்டிருந்தன. இந்த போராட்டத்திற்கு பிறகு மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மணிப்பூர் கலவரம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு முழு பொறுப்பு ஒன்றிய அரசு தான். இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் மற்றும் தமிழக முதல்வர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்துறை கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்வில், முன்னாள் பாடநூல் வாரிய தலைவர் லியாக்த் அலிகான், மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், திருப்பூர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், உடுமலை நகர அமைப்பாளர் சக்திவேல், வழக்கறிஞர் பெரியார்தாசன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...