சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் கோவை லாஜிஸ்டிக் பெடரேஷன் நிர்வாகிகளுடன் ஆலோசனை!

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் அலுவலக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், ரயில்வேயில் உள்ள சரக்கு போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


கோவை: தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் இருந்து இருந்து தினசரி, 170க்கும் மேற்பட்ட தனி லாரிகள் நூற்பு நூல், 20 டிரக்குகள் ஜவுளி இயந்திரங்கள், 75 லாரிகளில் இன்ஜினியரிங் உதிரிபாகங்கள், 10 லாரிகளில் வார்ப்பு பொருட்கள் என மேலும் பல பொருட்கள் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இது தவிர ஏற்றுமதி சரக்கு, கோயம்புத்தூரில் இருந்து பல வகையான சரக்குகள் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களில் (Containers) பல துறைமுகங்களுக்கு செல்கின்றன.



தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் அலுவலக நிர்வாகிகளுடன் கோவை ரயில் நிலையத்தில் அவர்களை சந்தித்தார்.



அதற்கு பிறகு கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம், CODISSIA, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம், SIEMA, கோடிசியா பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் அடல் இன்குபேஷன் மையத்தின், CDIIC இயக்குநர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார்.

ரயில்வேயில் உள்ள சரக்கு போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது மற்றும் செலவு, நேரம் மற்றும் வசதிக்கான நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.



போக்குவரத்து இழப்பு, காப்பீடு, பொருட்களின் பாதுகாப்பு, கையாளுதல், வேகன்களில் ஏற்றுதல் மற்றும் இறக்குவதில் உள்ள சவால்கள் விவாதத்தின் ஒரு பகுதியாகும். கூட்டத்தின் போது ரயில்வே அதிகாரிகளால் பல்வேறு அம்சங்கள் விரிவாக விளக்கப்பட்டது.

அனைத்து கருத்துக்களையும் பெற்ற பிறகு, ரயில்வே அதிகாரிகள் பத்து நாட்களுக்குள் சாத்தியமான தீர்வுகளை மறுபரிசீலனை செய்வார்கள் மற்றும் கோயம்புத்தூரில் சரக்கு வணிகத்தை பெற மீண்டும் குழுவை சந்திப்பார்கள்.



அவரை கோயம்புத்தூரில் உள்ள Cointec மையத்தில் CODISSIA தலைவர் & அலுவலக நிர்வாகிகள் அவரை கௌரவித்தனர்.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...