சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் கோவை லாஜிஸ்டிக் பெடரேஷன் நிர்வாகிகளுடன் ஆலோசனை!

தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் அலுவலக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், ரயில்வேயில் உள்ள சரக்கு போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


கோவை: தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் இருந்து இருந்து தினசரி, 170க்கும் மேற்பட்ட தனி லாரிகள் நூற்பு நூல், 20 டிரக்குகள் ஜவுளி இயந்திரங்கள், 75 லாரிகளில் இன்ஜினியரிங் உதிரிபாகங்கள், 10 லாரிகளில் வார்ப்பு பொருட்கள் என மேலும் பல பொருட்கள் கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இது தவிர ஏற்றுமதி சரக்கு, கோயம்புத்தூரில் இருந்து பல வகையான சரக்குகள் சீல் செய்யப்பட்ட கொள்கலன்களில் (Containers) பல துறைமுகங்களுக்கு செல்கின்றன.



தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தின் முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா, கோயம்புத்தூர் லாஜிஸ்டிக் பெடரேஷன் அலுவலக நிர்வாகிகளுடன் கோவை ரயில் நிலையத்தில் அவர்களை சந்தித்தார்.



அதற்கு பிறகு கோவை மாவட்ட சிறுதொழில் சங்கம், CODISSIA, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம், SIEMA, கோடிசியா பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் அடல் இன்குபேஷன் மையத்தின், CDIIC இயக்குநர்களுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினார்.

ரயில்வேயில் உள்ள சரக்கு போக்குவரத்து வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது மற்றும் செலவு, நேரம் மற்றும் வசதிக்கான நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.



போக்குவரத்து இழப்பு, காப்பீடு, பொருட்களின் பாதுகாப்பு, கையாளுதல், வேகன்களில் ஏற்றுதல் மற்றும் இறக்குவதில் உள்ள சவால்கள் விவாதத்தின் ஒரு பகுதியாகும். கூட்டத்தின் போது ரயில்வே அதிகாரிகளால் பல்வேறு அம்சங்கள் விரிவாக விளக்கப்பட்டது.

அனைத்து கருத்துக்களையும் பெற்ற பிறகு, ரயில்வே அதிகாரிகள் பத்து நாட்களுக்குள் சாத்தியமான தீர்வுகளை மறுபரிசீலனை செய்வார்கள் மற்றும் கோயம்புத்தூரில் சரக்கு வணிகத்தை பெற மீண்டும் குழுவை சந்திப்பார்கள்.



அவரை கோயம்புத்தூரில் உள்ள Cointec மையத்தில் CODISSIA தலைவர் & அலுவலக நிர்வாகிகள் அவரை கௌரவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...