பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க Family Liaison Police Officer (FLPO) முறையை கோவை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
Coimbatore:
கோவை மாநகர காவல்துறையில் பாலியல் குற்றங்கள், POCSO வழக்குகள், கடுமையான தாக்குதல், கடத்தல் தொடர்பான காணாமல் போதல், திட்டமிட்ட குற்றங்கள், பெரும் விபத்துகள், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கொடுங்குற்ற வழக்குகளில் புதிய Family Liaison Police Officer (FLPO) நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின் மூலம், கொடுங்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் காவல்துறைக்கும் இடையே எளிதான மற்றும் தொடர்ச்சியான தொடர்பு ஏற்படுத்தப்பட உள்ளது. வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து சட்ட விதிமுறைகள் மற்றும் விசாரணையின் ரகசியத்தன்மைக்கு உட்பட்டு உரிய தகவல்களை வழங்குதல், குடும்பத்தினரின் குறைகள் மற்றும் கவலைகளை கேட்டறிதல், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை FLPO மேற்கொள்வார்.
FLPO நியமிக்கப்பட்டவுடன், பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினரை விரைவாக தொடர்புகொண்டு, குடும்பத்தினருக்கான காவல்துறை தொடர்பு அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். குடும்பத்தினர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் அவசரநிலை தொடர்பான நடைமுறைகள் குறித்தும் தெரிவிப்பார்.

குடும்பத்தினரின் கருத்துகள் மற்றும் கவலைகளை பொறுமையுடன் கேட்டறிந்து, கண்ணியம் மற்றும் உணர்வுபூர்வமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என FLPO-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை நடைமுறைகள் எளிய மொழியில் விளக்கப்படும் என்றும், தவறான உறுதிமொழிகள் அல்லது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் வழங்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FIR பதிவு, குற்றப்பிரிவுகள், கைது, சட்டப்படி தெரிவிக்கக்கூடிய முக்கிய விசாரணை முன்னேற்றங்கள், குற்றப்பத்திரிகை அல்லது இறுதி அறிக்கை தாக்கல் மற்றும் முக்கியமான நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த தகவல்கள், விதிமுறைகள் மற்றும் விசாரணையின் ரகசியத்தன்மைக்கு உட்பட்டு குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படும்.
FLPO விசாரணை அதிகாரிக்கு மாற்றாக செயல்படமாட்டார். மாறாக, குடும்பத்தினரிடமிருந்து பெறப்படும் புதிய தகவல்கள், சாட்சிகள், CCTV காட்சிகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய தகவல்களை உரிய முறையில் விசாரணை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்வார்.
குடும்பத்தினர் அல்லது சாட்சிகளுக்கு அச்சுறுத்தல், மிரட்டல், சமரசம் செய்ய அழுத்தம், பின்தொடர்தல் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் தொந்தரவு ஏற்படுகிறதா என்பதையும் FLPO அவ்வப்போது கேட்டறிவார். இதுபோன்ற தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சட்டப்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவி, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், One Stop Centre, District Legal Services Authority, இழப்பீடு மற்றும் நிவாரணத் திட்டங்கள், தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட அரசு மற்றும் சட்டப்பூர்வ சேவைகளை குடும்பத்தினர் பெறுவதற்கான ஒருங்கிணைப்பையும் FLPO மேற்கொள்வார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் FLPO குடும்பத்தினருக்கான தொடர்பு அதிகாரியாக தொடர்ந்து செயல்படுவார். முக்கியமான நீதிமன்ற தேதிகள், ஜாமீன் நடவடிக்கைகள் மற்றும் சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நடைமுறைகள் குறித்து உரிய முறையில் தகவல் வழங்கப்படும்.
குடும்பத்தினரால் தெரிவிக்கப்படும் முக்கியமான அல்லது பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் குறித்த தகவல்கள் விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்கப்படும். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் அல்லது ஆசை காட்டுதல் போன்ற தகவல்கள் கிடைத்தால், அவை உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கொடுங்குற்ற வழக்குகளின் தன்மை மற்றும் குடும்பத்தினரின் தேவைக்கேற்ப FLPO தொடர்ந்து தொடர்பில் இருப்பார். குறிப்பாக, முதல் 24 மணி நேரத்திற்குள் இயன்றவரை நேரடி தொடர்பு அல்லது சந்திப்பு மேற்கொள்ளப்படும். முதல் ஏழு நாட்களில் தேவைக்கேற்ப அடிக்கடி தொடர்பு மேற்கொள்ளப்படும்.
விசாரணை நடைபெறும் காலத்தில் முக்கியமான வழக்குகளில் குறைந்தது 7 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது முக்கிய முன்னேற்றம் ஏற்படும் போதெல்லாம் குடும்பத்தினருடன் தொடர்பு மேற்கொள்ளப்படும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் குடும்பத்தினரின் தேவைக்கும் பாதுகாப்பு நிலைக்கும் ஏற்ப தொடர்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
அதிக அச்சுறுத்தல் உள்ள வழக்குகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கூடுதல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
குடும்பத்தினரின் குறைகள் வெறுமனே தெரிவிக்கப்பட்டதாக இல்லாமல், அவை உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கைக்காக கொண்டு செல்லப்படும். விசாரணையில் தாமதம், முறையற்ற விசாரணை, தகவல் பதிவு செய்ய மறுத்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அச்சுறுத்தல், சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்ட முக்கிய குறைகள் தொடர்பாக குடும்பத்தினர் தெரிவிக்கும் புகார்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் Dr. N. கண்ணன், இ.கா.ப., தலைமையில் FLPO-க்களுக்கான சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது.
கூட்டத்தில் FLPO-க்களின் செயல்பாடுகள், அவர்களது பொறுப்புகள் மற்றும் கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பு, உதவி மற்றும் தகவல்களை உரிய முறையில் வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குடும்பத்தினருடன் மனிதநேயமான அணுகுமுறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, அவர்களின் குறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது, விசாரணை அதிகாரியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் தேவையான அரசு நலச்சேவைகளைப் பெற்றுத் தருவதற்கான ஒருங்கிணைப்பை மேற்கொள்வது குறித்து FLPO-க்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
காவல் துணை ஆணையர்கள் (வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து), அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொடுங்குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வழக்கின் முன்னேற்றத்தை அறிய மீண்டும் மீண்டும் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலையைத் தவிர்த்து, குடும்பத்தினருக்கும் காவல்துறைக்கும் இடையே மனிதநேயமான தொடர்புப் பாலமாக FLPO செயல்படுவார் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரை மையமாகக் கொண்ட, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் மனிதநேய காவல் சேவையை மேலும் வலுப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாநகர காவல்துறையில் பாலியல் குற்றங்கள், POCSO வழக்குகள், கடுமையான தாக்குதல், கடத்தல் தொடர்பான காணாமல் போதல், திட்டமிட்ட குற்றங்கள், பெரும் விபத்துகள், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கொடுங்குற்ற வழக்குகளில் புதிய Family Liaison Police Officer (FLPO) நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையின் மூலம், கொடுங்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் காவல்துறைக்கும் இடையே எளிதான மற்றும் தொடர்ச்சியான தொடர்பு ஏற்படுத்தப்பட உள்ளது. வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து சட்ட விதிமுறைகள் மற்றும் விசாரணையின் ரகசியத்தன்மைக்கு உட்பட்டு உரிய தகவல்களை வழங்குதல், குடும்பத்தினரின் குறைகள் மற்றும் கவலைகளை கேட்டறிதல், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை FLPO மேற்கொள்வார்.
FLPO நியமிக்கப்பட்டவுடன், பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினரை விரைவாக தொடர்புகொண்டு, குடும்பத்தினருக்கான காவல்துறை தொடர்பு அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். குடும்பத்தினர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் அவசரநிலை தொடர்பான நடைமுறைகள் குறித்தும் தெரிவிப்பார்.
குடும்பத்தினரின் கருத்துகள் மற்றும் கவலைகளை பொறுமையுடன் கேட்டறிந்து, கண்ணியம் மற்றும் உணர்வுபூர்வமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என FLPO-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை நடைமுறைகள் எளிய மொழியில் விளக்கப்படும் என்றும், தவறான உறுதிமொழிகள் அல்லது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் வழங்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FIR பதிவு, குற்றப்பிரிவுகள், கைது, சட்டப்படி தெரிவிக்கக்கூடிய முக்கிய விசாரணை முன்னேற்றங்கள், குற்றப்பத்திரிகை அல்லது இறுதி அறிக்கை தாக்கல் மற்றும் முக்கியமான நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த தகவல்கள், விதிமுறைகள் மற்றும் விசாரணையின் ரகசியத்தன்மைக்கு உட்பட்டு குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படும்.
FLPO விசாரணை அதிகாரிக்கு மாற்றாக செயல்படமாட்டார். மாறாக, குடும்பத்தினரிடமிருந்து பெறப்படும் புதிய தகவல்கள், சாட்சிகள், CCTV காட்சிகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய தகவல்களை உரிய முறையில் விசாரணை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்வார்.
குடும்பத்தினர் அல்லது சாட்சிகளுக்கு அச்சுறுத்தல், மிரட்டல், சமரசம் செய்ய அழுத்தம், பின்தொடர்தல் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் தொந்தரவு ஏற்படுகிறதா என்பதையும் FLPO அவ்வப்போது கேட்டறிவார். இதுபோன்ற தகவல்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சட்டப்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவி, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், One Stop Centre, District Legal Services Authority, இழப்பீடு மற்றும் நிவாரணத் திட்டங்கள், தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட அரசு மற்றும் சட்டப்பூர்வ சேவைகளை குடும்பத்தினர் பெறுவதற்கான ஒருங்கிணைப்பையும் FLPO மேற்கொள்வார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் FLPO குடும்பத்தினருக்கான தொடர்பு அதிகாரியாக தொடர்ந்து செயல்படுவார். முக்கியமான நீதிமன்ற தேதிகள், ஜாமீன் நடவடிக்கைகள் மற்றும் சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நடைமுறைகள் குறித்து உரிய முறையில் தகவல் வழங்கப்படும்.
குடும்பத்தினரால் தெரிவிக்கப்படும் முக்கியமான அல்லது பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் குறித்த தகவல்கள் விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்கப்படும். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் அல்லது ஆசை காட்டுதல் போன்ற தகவல்கள் கிடைத்தால், அவை உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கொடுங்குற்ற வழக்குகளின் தன்மை மற்றும் குடும்பத்தினரின் தேவைக்கேற்ப FLPO தொடர்ந்து தொடர்பில் இருப்பார். குறிப்பாக, முதல் 24 மணி நேரத்திற்குள் இயன்றவரை நேரடி தொடர்பு அல்லது சந்திப்பு மேற்கொள்ளப்படும். முதல் ஏழு நாட்களில் தேவைக்கேற்ப அடிக்கடி தொடர்பு மேற்கொள்ளப்படும்.
விசாரணை நடைபெறும் காலத்தில் முக்கியமான வழக்குகளில் குறைந்தது 7 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது முக்கிய முன்னேற்றம் ஏற்படும் போதெல்லாம் குடும்பத்தினருடன் தொடர்பு மேற்கொள்ளப்படும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் குடும்பத்தினரின் தேவைக்கும் பாதுகாப்பு நிலைக்கும் ஏற்ப தொடர்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
அதிக அச்சுறுத்தல் உள்ள வழக்குகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கூடுதல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
குடும்பத்தினரின் குறைகள் வெறுமனே தெரிவிக்கப்பட்டதாக இல்லாமல், அவை உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கைக்காக கொண்டு செல்லப்படும். விசாரணையில் தாமதம், முறையற்ற விசாரணை, தகவல் பதிவு செய்ய மறுத்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அச்சுறுத்தல், சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்ட முக்கிய குறைகள் தொடர்பாக குடும்பத்தினர் தெரிவிக்கும் புகார்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்.
இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் Dr. N. கண்ணன், இ.கா.ப., தலைமையில் FLPO-க்களுக்கான சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது.
கூட்டத்தில் FLPO-க்களின் செயல்பாடுகள், அவர்களது பொறுப்புகள் மற்றும் கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான பாதுகாப்பு, உதவி மற்றும் தகவல்களை உரிய முறையில் வழங்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குடும்பத்தினருடன் மனிதநேயமான அணுகுமுறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, அவர்களின் குறைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது, விசாரணை அதிகாரியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் தேவையான அரசு நலச்சேவைகளைப் பெற்றுத் தருவதற்கான ஒருங்கிணைப்பை மேற்கொள்வது குறித்து FLPO-க்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
காவல் துணை ஆணையர்கள் (வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து), அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொடுங்குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வழக்கின் முன்னேற்றத்தை அறிய மீண்டும் மீண்டும் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலையைத் தவிர்த்து, குடும்பத்தினருக்கும் காவல்துறைக்கும் இடையே மனிதநேயமான தொடர்புப் பாலமாக FLPO செயல்படுவார் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரை மையமாகக் கொண்ட, வெளிப்படையான, பொறுப்பான மற்றும் மனிதநேய காவல் சேவையை மேலும் வலுப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என காவல்துறை தெரிவித்துள்ளது.