மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையம் எதிரே மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆடைகளை அகற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று மனித உரிமை மீறல் செயலை தடுக்க தவறிய இன வெறியை ஊக்குவிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள காமராஜ் பவனில் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி மாவட்ட நிர்வாகிகள், டிவிஷன் தலைவர்கள் இளைஞர் அணியினர், வழக்கறிஞர் அணியினர் மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...