மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையம் எதிரே மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆடைகளை அகற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று மனித உரிமை மீறல் செயலை தடுக்க தவறிய இன வெறியை ஊக்குவிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள காமராஜ் பவனில் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி மாவட்ட நிர்வாகிகள், டிவிஷன் தலைவர்கள் இளைஞர் அணியினர், வழக்கறிஞர் அணியினர் மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...