மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து, தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசை கண்டித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மணிப்பூரில் நடந்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை, கண்டித்து தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து மண்டல துணை அமைப்பாளர் ஒண்டிவீரன் கூறியதாவது, பிரதமராக இருக்க மோடிக்கு தகுதி இல்லை. லட்ச கணக்கில் மக்கள் தொகை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடிய வில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுக்கிறார்.

மணிப்பூரில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பற்றி மவுனம் காப்பது ஏன். மணிப்பூர் பெண்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க தவறிய மணிப்பூர் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், ஒரு மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த முடியாத மோடி உடனடியாக பதவி விலக வேண்டும். என கண்டன கோஷங்களை எழுப்பினர்.



இந்நிகழ்சியில், மாவட்ட செயலாளர் காளிமுத்து, தாராபுரம் நகர செயலாளர் தண்டபாணி, மண்டல துணை அமைப்பாளர் ஒண்டி வீரன், மண்டல மாணவர் அணி செயலாளர் விடியல் தில்லை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...