வால்பாறை அரசு மருத்துவமனையில் நுழைந்த 5 அடி பாம்பு - பத்திரமாக பிடித்துச் சென்ற தீயணைப்பு துறை!

வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை கண்டு நோயாளிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்துச் சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பிடித்து சென்றனர்.

வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் பாம்பு ஒன்று வார்டு பகுதிக்கு வந்ததாக நோயாளிகள் அச்சத்தில் தீயணைப்பு துறைக்கு அழைத்தனர்.



அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மருத்துவமனை வந்து பாம்பை தேடினர் நீண்ட நேரம் தேடிய போது பாம்பு மருந்துகள் வைக்கும் அறை அருகே இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பிடிபட்ட பாம்பானது 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு என கூறிய தீயணைப்பு துறையினர், மழைக்காலம் என்பதால் பாம்பு அறைக்கு வந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...