வால்பாறை அரசு மருத்துவமனையில் நுழைந்த 5 அடி பாம்பு - பத்திரமாக பிடித்துச் சென்ற தீயணைப்பு துறை!

வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை கண்டு நோயாளிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்துச் சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பிடித்து சென்றனர்.

வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் பாம்பு ஒன்று வார்டு பகுதிக்கு வந்ததாக நோயாளிகள் அச்சத்தில் தீயணைப்பு துறைக்கு அழைத்தனர்.



அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மருத்துவமனை வந்து பாம்பை தேடினர் நீண்ட நேரம் தேடிய போது பாம்பு மருந்துகள் வைக்கும் அறை அருகே இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பிடிபட்ட பாம்பானது 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு என கூறிய தீயணைப்பு துறையினர், மழைக்காலம் என்பதால் பாம்பு அறைக்கு வந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...