வால்பாறை அரசு மருத்துவமனையில் நுழைந்த 5 அடி பாம்பு - பத்திரமாக பிடித்துச் சென்ற தீயணைப்பு துறை!

வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை கண்டு நோயாளிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்துச் சென்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் புகுந்த 5 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பிடித்து சென்றனர்.

வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் பாம்பு ஒன்று வார்டு பகுதிக்கு வந்ததாக நோயாளிகள் அச்சத்தில் தீயணைப்பு துறைக்கு அழைத்தனர்.



அதைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மருத்துவமனை வந்து பாம்பை தேடினர் நீண்ட நேரம் தேடிய போது பாம்பு மருந்துகள் வைக்கும் அறை அருகே இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பிடிபட்ட பாம்பானது 5 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு என கூறிய தீயணைப்பு துறையினர், மழைக்காலம் என்பதால் பாம்பு அறைக்கு வந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...