ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் முதுகலை சமூகப் பணி துறையும் ரெஸ்ட் என்னும் தன்னார்வ அமைப்பும் இணைந்து பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்கியது. இதில் பங்குபெற்ற பெண்களில் பெரும்பாலானோர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். இப்பயிற்சியானது சர்வதேச பெண்கள் தினத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.



இதில், ரெஸ்ட் அமைப்பின் இயக்குநர் டி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இப்பயிற்சியை இக்கல்லூரயின் சமூகப் பணித் துறை மாணவி வைசாலி நடத்தினார்.

இதில், சுய உதவிக் குழுவினைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வளையல் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது டி.சீனிவாசன் பேசுகையில், சுய தொழிலும், சுய வேலைவாய்ப்பும் பெண்களை தாங்கள் சொந்த காலில் நிக்க உதவுகிறது. தற்பொழுதுள்ள சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைத்து மக்களின் பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சுய வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். சமகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஏதோவொரு வேலை செய்ய வேண்டும். அல்லது சுயமாக வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வீடும் நாடும் வளர்ச்சியடையும். பெண்கள் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை துவக்குவது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்கள் தொழில் முனைவோர்க்கான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். சமூக நல அமைப்புகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், பெண் தொழில் முனைவோர்களை உறுவாக்குவதிலும் பெரும் பங்காற்ற வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு வளையல் மற்றும் இதர ஆபரணங்கள்  தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலான சுயஉதவுக் குழு பெண்களும் மற்றும் இல்லத்தரசிகளும் கோவையில் பல்வேறு பகுதியில் இருந்து கலந்துகொண்டர்.



இதில், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணித் துறையின் தலைவர் அழகர்சாமி, பேராசிரியர் மோகனப்பிரியா மற்றும ரெஸ்ட் அமைப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...