ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் முதுகலை சமூகப் பணி துறையும் ரெஸ்ட் என்னும் தன்னார்வ அமைப்பும் இணைந்து பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்கியது. இதில் பங்குபெற்ற பெண்களில் பெரும்பாலானோர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். இப்பயிற்சியானது சர்வதேச பெண்கள் தினத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.



இதில், ரெஸ்ட் அமைப்பின் இயக்குநர் டி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இப்பயிற்சியை இக்கல்லூரயின் சமூகப் பணித் துறை மாணவி வைசாலி நடத்தினார்.

இதில், சுய உதவிக் குழுவினைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வளையல் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியின் போது டி.சீனிவாசன் பேசுகையில், சுய தொழிலும், சுய வேலைவாய்ப்பும் பெண்களை தாங்கள் சொந்த காலில் நிக்க உதவுகிறது. தற்பொழுதுள்ள சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைத்து மக்களின் பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் சுய வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். சமகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஏதோவொரு வேலை செய்ய வேண்டும். அல்லது சுயமாக வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வீடும் நாடும் வளர்ச்சியடையும். பெண்கள் ஸ்டார்ட்டப் நிறுவனங்களை துவக்குவது குறித்து சிந்திக்க வேண்டும். அதற்கு அவர்கள் தொழில் முனைவோர்க்கான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். சமூக நல அமைப்புகள் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், பெண் தொழில் முனைவோர்களை உறுவாக்குவதிலும் பெரும் பங்காற்ற வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு வளையல் மற்றும் இதர ஆபரணங்கள்  தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலான சுயஉதவுக் குழு பெண்களும் மற்றும் இல்லத்தரசிகளும் கோவையில் பல்வேறு பகுதியில் இருந்து கலந்துகொண்டர்.



இதில், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சமூகப் பணித் துறையின் தலைவர் அழகர்சாமி, பேராசிரியர் மோகனப்பிரியா மற்றும ரெஸ்ட் அமைப்பினர் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...