வால்பாறை, நடுமலை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

வால்பாறையை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையின் சுவர் மற்றும் கதவு, ஜன்னல் ஆகியவற்றை உடைத்து ஒற்றை காட்டு யானை அங்கு வைக்கப்பட்டிருந்த 2 மூட்டை அரிசியை தின்றது.



இச்சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் கூச்சல் எழுப்பியதைத் தொடர்ந்து, அந்த காட்டுயானை வால்பாறை ஐயப்பன் கோவில் பகுதியிக்கு சென்று நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் யானையை காட்டிற்குள் விரட்டினர்.



தொடர்ந்து வால்பாறைக்கு உட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு வருவதால், கும்கி யானைகளை வைத்து காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இதேப் போல் கடந்த இரு தினத்திற்கு முன்பு சின்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டுயானை கூட்டம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அழகர்சாமி, ஏசையன், பழனிசாமி ஆகியோரது வீட்டின் முன்புறம் இருந்த தகர செட்டுகளை உடைத்தது. தொடர்ந்து காட்டு யானை பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...