வால்பாறை, நடுமலை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

வால்பாறையை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையின் சுவர் மற்றும் கதவு, ஜன்னல் ஆகியவற்றை உடைத்து ஒற்றை காட்டு யானை அங்கு வைக்கப்பட்டிருந்த 2 மூட்டை அரிசியை தின்றது.



இச்சம்பவத்தினைக் கண்ட பொதுமக்கள் கூச்சல் எழுப்பியதைத் தொடர்ந்து, அந்த காட்டுயானை வால்பாறை ஐயப்பன் கோவில் பகுதியிக்கு சென்று நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் உதவியுடன் யானையை காட்டிற்குள் விரட்டினர்.



தொடர்ந்து வால்பாறைக்கு உட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு வருவதால், கும்கி யானைகளை வைத்து காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இதேப் போல் கடந்த இரு தினத்திற்கு முன்பு சின்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டுயானை கூட்டம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அழகர்சாமி, ஏசையன், பழனிசாமி ஆகியோரது வீட்டின் முன்புறம் இருந்த தகர செட்டுகளை உடைத்தது. தொடர்ந்து காட்டு யானை பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...