தியானலிங்கம்‌ மன அமைதியை தருகிறது - ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம்‌!

கோவை ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானம்‌ ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌, தியானலிங்கம் மனதிற்கு அமைதியை தருவதாக தெரிவித்தார். மேலும் இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுப்பது, மரங்கள்‌ நடும்‌ பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்கள்‌ மிகவும்‌ பாராட்டுக்குரியவை எனவும் கூறினார்.



கோவை: தியானலிங்கம் மனதிற்கு அமைதியை தருவதாக திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌ தெரிவித்துள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானம்‌ ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌ கோவை ஈஷா யோகா மையத்திற்கு கடந்த ஜூன்‌ 18 வருகை தந்தார்‌. 



அவருக்கு மடாதிபதிகளை வரவேற்கும்‌ சம்பிரதாய முறைப்படி நூற்றுக்கணக்கானோர்‌ திரண்டு வரவேற்பு அளித்தனர்‌. 



பின்னர்‌, மகா சன்னிதானம்‌ பார்வையிடுவதற்காக ஆதியோகியில்‌ சிறப்பு திவ்ய தரிசனம்‌ ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையடுத்து, நேற்று காலை (ஜூன்‌ 19) கைலாய வாத்தியம்‌ முழங்க ஆலயங்களுக்கு மகா சந்நிதானம்‌ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்‌ தியானலிங்கம்‌, லிங்கபைரவி, நாகா சந்நிதி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம்‌ செய்தார்‌. 

பின்னர்‌, நாட்டு மாடுகளை பராமரிக்கும்‌ ஈஷாவின்‌ கோசாலையை பார்வையிட்டார்‌. மேலும்‌, ஈஷா சம்ஸ்கிருதி குருகுலத்திற்கு சென்று மாணவர்களின்‌ களரி பயட்டை நேரில்‌ கண்டு களித்ததோடு மாணவர்களுடன்‌ கலந்துரையாடினார்‌.

மகா சந்நிதானம்‌ ஈஷாவிற்கு வருகை தந்தது குறித்த தனது அனுபவம் குறித்து பேசியதாவது, சத்குருவின்‌ ஈஷா அறக்கட்டளைக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று தரிசனம்‌ செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள தியானலிங்கம்‌ மன அமைதியை தருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து லட்சக்கணக்கான மக்கள்‌ இங்கு வந்து யோகா கற்று பயனடைகிறார்கள்‌. இந்த யோக பயிற்சிகள்‌ அவர்களின்‌ உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்பட உதவும்‌. மன அமைதியையும்‌ அளிக்கும்‌. 

தேவார பாட சாலை மறறும்‌ கோசாலையை சென்று பார்வையிட்டோம்‌. கோசாலையை மிக அருமையாக பராமரித்து வருகிறார்கள்‌. இது மிகப்பெரிய புண்ணியம்‌.

அதேபோல்‌, பாரம்பரியமான சிறு தானிய உணவுகளை கொண்டு இங்கு அன்னதானம்‌ அளிக்கிறார்கள்‌. இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுப்பது, மரங்கள்‌ நடும்‌ பணிகளை மேற்கொள்வது போன்ற ஈஷாவின்‌ செயல்கள்‌ மிகவும்‌ பாராட்டுக்குரியவை. 

ஈஷா அறக்கட்டளையை செம்மையாக நடத்தி வரும்‌ அனைவருக்கும்‌ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்‌.

இவ்வாறு அவர் கூறினார்‌.

ஈஷாவிற்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ மற்றும்‌ தியான அன்பர்களுக்கு மகா சன்னிதானம்‌ அருளாசி வழங்கினார்‌. மேலும்‌, ஈஷாவின்‌ பிரம்மச்சாரிகள்‌ மற்றும்‌ சந்நியாசிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்‌.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...