தியானலிங்கம்‌ மன அமைதியை தருகிறது - ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம்‌!

கோவை ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானம்‌ ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌, தியானலிங்கம் மனதிற்கு அமைதியை தருவதாக தெரிவித்தார். மேலும் இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுப்பது, மரங்கள்‌ நடும்‌ பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்கள்‌ மிகவும்‌ பாராட்டுக்குரியவை எனவும் கூறினார்.



கோவை: தியானலிங்கம் மனதிற்கு அமைதியை தருவதாக திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌ தெரிவித்துள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானம்‌ ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌ கோவை ஈஷா யோகா மையத்திற்கு கடந்த ஜூன்‌ 18 வருகை தந்தார்‌. 



அவருக்கு மடாதிபதிகளை வரவேற்கும்‌ சம்பிரதாய முறைப்படி நூற்றுக்கணக்கானோர்‌ திரண்டு வரவேற்பு அளித்தனர்‌. 



பின்னர்‌, மகா சன்னிதானம்‌ பார்வையிடுவதற்காக ஆதியோகியில்‌ சிறப்பு திவ்ய தரிசனம்‌ ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையடுத்து, நேற்று காலை (ஜூன்‌ 19) கைலாய வாத்தியம்‌ முழங்க ஆலயங்களுக்கு மகா சந்நிதானம்‌ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்‌ தியானலிங்கம்‌, லிங்கபைரவி, நாகா சந்நிதி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம்‌ செய்தார்‌. 

பின்னர்‌, நாட்டு மாடுகளை பராமரிக்கும்‌ ஈஷாவின்‌ கோசாலையை பார்வையிட்டார்‌. மேலும்‌, ஈஷா சம்ஸ்கிருதி குருகுலத்திற்கு சென்று மாணவர்களின்‌ களரி பயட்டை நேரில்‌ கண்டு களித்ததோடு மாணவர்களுடன்‌ கலந்துரையாடினார்‌.

மகா சந்நிதானம்‌ ஈஷாவிற்கு வருகை தந்தது குறித்த தனது அனுபவம் குறித்து பேசியதாவது, சத்குருவின்‌ ஈஷா அறக்கட்டளைக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று தரிசனம்‌ செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள தியானலிங்கம்‌ மன அமைதியை தருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து லட்சக்கணக்கான மக்கள்‌ இங்கு வந்து யோகா கற்று பயனடைகிறார்கள்‌. இந்த யோக பயிற்சிகள்‌ அவர்களின்‌ உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்பட உதவும்‌. மன அமைதியையும்‌ அளிக்கும்‌. 

தேவார பாட சாலை மறறும்‌ கோசாலையை சென்று பார்வையிட்டோம்‌. கோசாலையை மிக அருமையாக பராமரித்து வருகிறார்கள்‌. இது மிகப்பெரிய புண்ணியம்‌.

அதேபோல்‌, பாரம்பரியமான சிறு தானிய உணவுகளை கொண்டு இங்கு அன்னதானம்‌ அளிக்கிறார்கள்‌. இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுப்பது, மரங்கள்‌ நடும்‌ பணிகளை மேற்கொள்வது போன்ற ஈஷாவின்‌ செயல்கள்‌ மிகவும்‌ பாராட்டுக்குரியவை. 

ஈஷா அறக்கட்டளையை செம்மையாக நடத்தி வரும்‌ அனைவருக்கும்‌ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்‌.

இவ்வாறு அவர் கூறினார்‌.

ஈஷாவிற்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ மற்றும்‌ தியான அன்பர்களுக்கு மகா சன்னிதானம்‌ அருளாசி வழங்கினார்‌. மேலும்‌, ஈஷாவின்‌ பிரம்மச்சாரிகள்‌ மற்றும்‌ சந்நியாசிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்‌.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...