பல்லடம் நகராட்சித் தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழல் - 7 திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் போர்க்கொடி!

பல்லடம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 உறுப்பினர்களில் 7 திமுகவினர் உட்பட 10 பேர் தங்களது வார்டுகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் புறக்கணிப்பதாகவும், நகராட்சியில் டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் கூறி நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதன் காரணமாக பல்லடம் நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



திருப்பூர்: பல்லடம் நகராட்சியில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தலைவராக கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் நகராட்சி தலைவர் கவிதாமணி என்பவர் பொறுப்பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.



இந்நிலையில் பல்லடம் நகராட்சி ஆணையரிடம், திமுக உறுப்பினர்கள் 7 பேர் உட்பட 10 கவுன்சிலர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.



அதில், தங்களது வார்டுகளுக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை கட்டமைப்புகளும் செய்யாமல், மக்களிடம் தங்களை மிகுந்த அவமதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும், டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கமிஷன் காரணமாக டெண்டர் மாற்றம் செய்ய கவுன்சிலர்களிடம் கவனத்தை மாற்றி கையெழுத்து பெற்றதாகவும் இதனால் கவுன்சிலர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதனால் ஊழல் முறைகேடு நடப்பதாக திமுக கவுன்சிலர்களுக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மாதாந்திர சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டங்கள் என நகர்மன்ற கூட்டத்தை பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும் கடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் இன்றி ரகசியமாக நடந்ததற்கு கண்டனம் தெரிவித்தும் 7 திமுக கவுன்சிலர்கள் மற்றும் 2 பாஜக கவுன்சிலர்கள் 1 காங்கிரஸ் கவுன்சிலர் என மொத்தம் 18 கவுன்சிலர்களில் 10 கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...