பல்லடம் நகராட்சித் தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழல் - 7 திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் போர்க்கொடி!

பல்லடம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 உறுப்பினர்களில் 7 திமுகவினர் உட்பட 10 பேர் தங்களது வார்டுகளுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் புறக்கணிப்பதாகவும், நகராட்சியில் டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் கூறி நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதன் காரணமாக பல்லடம் நகராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



திருப்பூர்: பல்லடம் நகராட்சியில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக உட்பட 10 கவுன்சிலர்கள் நகராட்சி தலைவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி தலைவராக கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் நகராட்சி தலைவர் கவிதாமணி என்பவர் பொறுப்பேற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.



இந்நிலையில் பல்லடம் நகராட்சி ஆணையரிடம், திமுக உறுப்பினர்கள் 7 பேர் உட்பட 10 கவுன்சிலர்கள் புகார் மனுவை அளித்துள்ளனர்.



அதில், தங்களது வார்டுகளுக்கு இதுவரை எந்த ஒரு அடிப்படை கட்டமைப்புகளும் செய்யாமல், மக்களிடம் தங்களை மிகுந்த அவமதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும், டெண்டர் முறைகேடு நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கமிஷன் காரணமாக டெண்டர் மாற்றம் செய்ய கவுன்சிலர்களிடம் கவனத்தை மாற்றி கையெழுத்து பெற்றதாகவும் இதனால் கவுன்சிலர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதனால் ஊழல் முறைகேடு நடப்பதாக திமுக கவுன்சிலர்களுக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் மாதாந்திர சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டங்கள் என நகர்மன்ற கூட்டத்தை பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும் கடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் இன்றி ரகசியமாக நடந்ததற்கு கண்டனம் தெரிவித்தும் 7 திமுக கவுன்சிலர்கள் மற்றும் 2 பாஜக கவுன்சிலர்கள் 1 காங்கிரஸ் கவுன்சிலர் என மொத்தம் 18 கவுன்சிலர்களில் 10 கவுன்சிலர்கள் ஒருங்கிணைந்து நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...