கொண்டையம்பாளையம் அருகேயுள்ள திருமலைசெட்டிபுதூர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.80 லட்சம் மதிப்பில் நிறைவேற்றிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் அருகே மழைநீர் வடிகால் பணிகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி கோட்டைப்பாளையம் கிராமம் 6 வது வார்டு பகுதி திருமலைசெட்டி புதூரில் மழை நீர் வடிகால் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வடிகால் பிரச்சனைக்கு தீர்வாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர், பி.ஆர்.ஜி அருண்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ.14.80 லட்சம் ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார்.
இந்நிலையில், வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை பணிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது, சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர், 6 வது வார்டு கவுன்சிலர் S.தீபன்குமார் முன்னிலையில் பூமி பூஜை போடபட்டது.
இதில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய குழு தலைவர் கவிதா சண்முகசுந்தரம், ஒன்றிய குழு துணைத்தலைவர் ருக்குமணி பாலகிருஷ்ணன், மற்றும் மற்ற வார்டு கவுன்சிலர்கள் கண்ணம்மாள், ப்ரித்தா மற்றும் ஊராட்சி செயலர் மாருகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், நிதியினை ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், நீண்ட நாள் கோரிக்கையினை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து அதனை நிறைவேற்றி தந்த 6 வது வார்டு கவுன்சிலர் S. தீபன்குமார் ஆகியோரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.