வடிகால் பணிக்கு ரூ.14.80 லட்சம் நிதி ஒதுக்கிய எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமாருக்கு மக்கள் நன்றி

கொண்டையம்பாளையம் அருகேயுள்ள திருமலைசெட்டிபுதூர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.80 லட்சம் மதிப்பில் நிறைவேற்றிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் அருகே மழைநீர் வடிகால் பணிகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார். 

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி கோட்டைப்பாளையம் கிராமம் 6 வது வார்டு பகுதி திருமலைசெட்டி புதூரில் மழை நீர் வடிகால் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வடிகால் பிரச்சனைக்கு தீர்வாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர், பி.ஆர்.ஜி அருண்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ.14.80 லட்சம் ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார். 

இந்நிலையில், வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை பணிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது, சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர், 6 வது வார்டு கவுன்சிலர் S.தீபன்குமார் முன்னிலையில் பூமி பூஜை போடபட்டது.

இதில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய குழு தலைவர் கவிதா சண்முகசுந்தரம், ஒன்றிய குழு துணைத்தலைவர் ருக்குமணி பாலகிருஷ்ணன், மற்றும் மற்ற வார்டு கவுன்சிலர்கள் கண்ணம்மாள், ப்ரித்தா மற்றும் ஊராட்சி செயலர் மாருகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நிதியினை ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், நீண்ட நாள் கோரிக்கையினை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து அதனை நிறைவேற்றி தந்த 6 வது வார்டு கவுன்சிலர் S. தீபன்குமார் ஆகியோரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...