வடிகால் பணிக்கு ரூ.14.80 லட்சம் நிதி ஒதுக்கிய எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமாருக்கு மக்கள் நன்றி

கொண்டையம்பாளையம் அருகேயுள்ள திருமலைசெட்டிபுதூர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.14.80 லட்சம் மதிப்பில் நிறைவேற்றிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் அருகே மழைநீர் வடிகால் பணிகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார். 

கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி கோட்டைப்பாளையம் கிராமம் 6 வது வார்டு பகுதி திருமலைசெட்டி புதூரில் மழை நீர் வடிகால் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வடிகால் பிரச்சனைக்கு தீர்வாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர், பி.ஆர்.ஜி அருண்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ.14.80 லட்சம் ரூபாய் ஒதுக்கி தந்துள்ளார். 

இந்நிலையில், வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை பணிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது, சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர், 6 வது வார்டு கவுன்சிலர் S.தீபன்குமார் முன்னிலையில் பூமி பூஜை போடபட்டது.

இதில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய குழு தலைவர் கவிதா சண்முகசுந்தரம், ஒன்றிய குழு துணைத்தலைவர் ருக்குமணி பாலகிருஷ்ணன், மற்றும் மற்ற வார்டு கவுன்சிலர்கள் கண்ணம்மாள், ப்ரித்தா மற்றும் ஊராட்சி செயலர் மாருகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நிதியினை ஒதுக்கிய சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், நீண்ட நாள் கோரிக்கையினை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து அதனை நிறைவேற்றி தந்த 6 வது வார்டு கவுன்சிலர் S. தீபன்குமார் ஆகியோரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...