கோவை பேரூர் அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது - 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை பேரூர் அருகே புட்டுவிக்கி சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், அவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் புலியகுளம் பகுதியை சேர்ந்த நவீன் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 3 கிலோ அளவிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் பேரூர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பேரூர் சாலை புட்டுவிக்கி அருகே தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, புட்டு விக்கி சாலை கந்தசாமி கவுண்டர் தோட்டம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் நவீன் (25) என்பதும், பெயிண்டர் வேலை செய்து வந்த இவர், தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல் தற்போது வரை தனிப்படை போலீசாரால் இதுவரை போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 347 நபர்கள் மீது 260 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 516 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கண்காணிப்பு வேட்டை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...