கோவையில் புகையிலை விற்பனை குறித்து சுகாதாரத்துறை திடீர் சோதனை!

மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம் மற்றும் சீரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில், கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் புகையிலை விற்பனை குறித்து நடைபெற்ற திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் புகையிலை விற்பனை தொடர்பாக சுகாதார துறை சார்பில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில் பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மூலம் மலுமிச்சம்பட்டி, ஒத்தக் கால்மண்டபம், சீரபாளையம் பகுதியில் திடீர் சோதனை நடைபெற்றது. 

இதில் நேர்முக உதவியாளர் குமார் மாவட்ட ஆலோசகர் சரண்யாதேவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிராஜன் சமூக பணியாளர் முரளி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கும், பேக்கரி, கடை உரிமையாளர் ஆகியோருக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...