ராகுல்காந்தி இந்தியர் தானா? - முன்னாள் பாஜக எம்.பியின் சர்ச்சை கருத்து!

திருப்பூரில் பேசிய முன்னாள் பாஜக எம்.பி கார்வேந்தன், இந்திய நாட்டின் குடிமகனாக இருப்பவர் வெளிநாட்டிற்கு சென்றால் நம் நாட்டின் பெருமைகளை பேச வேண்டுமே தவிர, நம் நாடு மற்றும் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசுவது அவர் இந்திய குடிமகனா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.



திருப்பூர்: ராகுல் காந்தி இந்தியர் தானா என்ற சந்தேகம் ஏற்படுவதாக முன்னாள் பாஜக எம்.பி கார்வேந்தன் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் உள்ள திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் குறித்த இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, 9 ஆண்டுகளில் பாஜக பல்வேறு சாதனைகளை செய்திருகிறது. 



தமிழகத்திற்கு பெருமை சேர்க்க கூடிய வகையில் யோகாவை சர்வதேச அளவில் கடைபிடிக்கும் வகையில் சர்வதேச யோகா தினம் கொண்டுவரப்பட்டுள்ளது. அம்பேத்கரை பற்றி பலரும் பேசி வரக்கூடிய சூழ்நிலையில் அம்பேத்கர் பிறந்த, வாழ்ந்த, படித்த, இறந்த என ஐந்து இடங்களை ஒருங்கிணைத்து பஞ்ச திருத்தலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள இந்திய தூதரகங்களில் அம்பேத்கரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் எதிர்க்கட்சிகள் எத்தனை கூட்டங்கள் போட்டாலும் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றது போல பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார். 

அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியது குறித்த கேள்விக்கு, இந்திய நாட்டைச் சேர்ந்தவர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நாட்டின் மீது பற்று இருந்தால் இந்திய நாட்டின் பெருமைகளை பற்றி பேசியிருக்க வேண்டுமே தவிர இந்தியாவையும் தலைவர்களையும் பற்றி அவதூறாக பேசியதால் அவர் இந்தியரா என்ற சந்தேகத்தை எழுப்பக் கூடியதாக இருக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...