பிழைப்பூதியம் வழங்கக்கோரி கோவையில் இளநிலை உதவியாளர் உண்ணாவிரதம்!

சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் இளநிலை உதவியாளர் சரவணகுமார், இடைநீக்கம் செய்யப்பட்டு பிழைப்பூதியம் பெற்று வந்த நிலையில், கடந்த 5 மாதமாக பிழைப்பூதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



கோவை: பிழைப்பூதியம் வழங்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் சின்ன தடாகம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு பள்ளியில் சமச்சீர் அல்லாத புத்தகம் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டு தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து சரவணக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 2022 ஆம் ஆண்டு 50 சதவீதம் பிழைப்பு ஊதியம் பெற்று வந்தார். ஆனால் தற்பொழுது 2023 ஜனவரி முதல் இன்று வரை பிழைப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், கடந்த ஐந்து மாதம் பிழைப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...