கோவையில் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, முகாம் அலுவலகத்தில் உள்ள பொருட்களை தனியார் டிராவல்ஸ் மூலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார். கோவை நீலாம்பூர் - மதுக்கரை நெடுஞ்சாலையில் சென்ற போது, லாரி ஓட்டுநரை மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துகிருஷ்ணன் (வயது30). சென்னையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஈச்சர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, சமீபத்தில் சென்னைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஈரோட்டில் உள்ள ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்து அவரது பொருட்கள் தனியார் டிராவல்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சனிக்கிழமை அனுப்பியுள்ளார்.

பொருட்களை ஏற்றிக்கொண்டு முத்துகிருஷ்ணன் சேலம் - கொச்சின் சாலையில் கிளம்பியுள்ளார். அப்போது, சனிக்கிழமை நள்ளிரவு கோவை நீலாம்பூர் - மதுக்கரை நெடுஞ்சாலையில், கஞ்சிக்கோணாப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், ஈச்சர் லாரியின் பின் சக்கரம் டயர் பஞ்சர் ஆகியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய ஓட்டுநர் முத்துகிருஷ்ணன், கீழே இறங்கி பார்க்கச் சென்றபோது, மர்ம நபர்கள் மூன்று பேரும் முத்துகிருஷண்னை பிடித்து கையை கயிறால் கட்டிவிட்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் லாரியின் பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, அங்கு வந்த சக வாகன ஓட்டிகள் உதவியுடன் கயிறுகளை கழற்றிய முத்துகிருஷ்ணன், போலீஸ் அவசர எண் 100 க்கு அழைத்து தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போத்தனூர் குற்றப்பலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...