பள்ளி வாகனங்களின் தரம் குறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு!

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், பொள்ளாச்சியில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்தும், பாதுகாப்பு வசதிகள் குறித்தும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.



தமிழகத்தில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறக்க இன்னும் பத்து நாட்களே உள்ளது.



இந்த நிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் இயக்கப்படும் பள்ளி பேருந்து மற்றும் வேன்களை இன்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ளமொத்தம் உள்ள 374 பள்ளி வாகனங்களில் 300 வாகனங்கள் இந்த ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டது.



இந்த ஆய்வில் வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயக்கப்படுகிறதா, வேக கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக வைக்கப்பட்டு உள்ளதா, அவசர காலவழிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 30க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் முறையாக பாதுகாப்பு வசதி இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது.



மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கும் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து ஓட்டுனர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...