சேவூர் அரசுப் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் வசூல் - வைரலாகும் வீடியோ

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க ஆசிரியர்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: சேவூர் அரசு பள்ளியில் +2 மாணவ மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் வசூலிக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூரில் ஊராட்சியில் இயங்கி வரும் சேவூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், 2022 - 2023 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்ச்சி முடிவுகள் வெளியானது.

இதனிடையே தேர்ச்சியடைந்த மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் சேவூர் அரசுப் பள்ளி வளாகத்தில் நன்னடத்தைச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.



மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கு பெற்றோருடன் வந்திருந்த மாணவ-மாணவிகளிடம் சான்றிதழ் வழங்க தலா ரூ.100 வீதம் கட்டாய வசூல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே போல் வசூல் செய்த பணத்திற்கு எந்தவித ரசிதும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆசிரியர்களின் இந்த வசூல் வேட்டை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...