‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மண்டியிட்டு மனு!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும், திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் பதாகைகளை ஏந்தியபடி மண்டியிட்டு மனு அளித்தனர்.


கோவை: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடக் கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளித்தனர்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் வெளியானதை தொடர்ந்து இத்திரைப்படம் ஒரே நாள் மட்டுமே திரையரங்கில் ஓடியது. குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் இரண்டு நாட்கள் ஓடியது.



இதனையடுத்து பாஜக உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் இந்த திரைப்படத்தை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி திரையிட வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் திரைப்படம் எந்த திரையரங்குகளிலும் திரையிடப்படவில்லை.



இந்நிலையில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில், அந்த இயக்கத்தினர், இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகைகளை ஏந்தி மண்டியிட்டு மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...