கோவையில் டிஐஇ சார்பில் மகளிருக்கான தொழில்முனைவோர் ஏர்ஸ்வீ பயிற்சிப் பட்டறை


வாரங்காலில் நடைபெற்ற முதலாவது பயிற்சி பட்டறையின் வெற்றியைத் தொடர்ந்து, டிஐஇ குளோபல் கோவையில் நான்கு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. அகில இந்திய அளவில் தொழில் முனைவோரை உருவாக்கி, மகளிர் பொருளாதாரத்தை உயர்த்துதல் என்ற இந்த பயிற்சி பட்டறைக்கு தேவையான உதவிகளை இந்தியாவில் உள்ள அமெரிக்கா மிஷன் ஏற்பாடு செய்திருந்தது.

கோவை ரேஸ்கோர்ஸ்-யில் உள்ள தாஸ் சுர்யா விவாந்தாவில் நேற்று நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் ஏர்ஸ்வீ திட்டத்தின் தலைவி சீமா சதுர்வேதி பங்கேற்று பேசுகையில், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இளம் பெண்களின் முன்னேற்றம் தான் எங்களது நோக்கம். வாய்ப்புள்ள பெண்களுக்கு தொழில் வாய்ப்பு அளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 



ஏர்ஸ்வீ திட்டமானது அவர்களது நிலையை உயர்த்தி பிரச்சனைகளை சமாளித்து வாய்ப்புகளை பயன்படுத்தி, வெற்றிகரமான தொழில் முனைவோருக்கான தீர்வுகளை அளிப்பதாகும்" என்றார்.

இந்திய ஆலோசக ஹேமலதா அண்ணாமலை பேசுகையில், இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்க கிடைத்ததையடுத்து 150 பேர் பல்வேறு போட்டிகளுக்கு இடையே தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சமுதாய பொருளாதார பின்னணியை உடையவர்கள். இவர்களது தொழில் முனைவோர் வெற்றியை காண விரும்புகிறோம்" என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் கலாச்சார பிரிவு கவுன்சிலர் டாக்டர் க்ரேக் எல்.டிக்கர் இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்று பேசுகையில், தொழில் முனைப்பில் பெண்களின் பங்கு அவசியமானது. சிறந்த துவக்க நிலைக்கு தேவையானது, மிக முக்கியமானது.

இந்தியாவில் ஒரு நட்பு ரீதியான தொழில்முனைப்பு சூழலை உருவாக்க இந்த ஒரு வார கால பயிற்சி பட்டறை ஒரு முன் உதாரணமாக அமையும். டிஐஇ குளோபல் மற்றும் டிஐஇ கோவை இணைந்து கோவையில் இந்த பயிற்சி பணிமனையை நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...