கட்டடப் பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் - தமிழக அரசுக்கு பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் பொறியாளர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என்று கட்டிட பொறியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஏற்பு விழா நடைபெற்றது.

அதில், சங்கத்தின் 2022 ஆம் ஆண்டில் முக்கிய பொறுப்பில் இருந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.



இதன் தொடர்ச்சியாக பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக சிற்பி செல்வராஜ், துணை தலைவராக மோகனகண்ணன், செயலாளர் தனபால்,பொருளாளர் பொன்.சக்திவேல், ஆகியோர் உறுதிமொழி அளித்து பதவியேற்றுக் கொண்டனர்.



முன்னாள் பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டிட பொறியாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மோகன் ராஜா, தமிழ்நாடு முழுவதும் கட்டுமான தொழிலை நம்பி 10 ஆயிரம் கட்டிட பொறியாளர்களும் 50 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதேபோன்று பட்டம் பெறாத போலி பொறியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் தமிழக அரசு உடனடியாக மருத்துவத்துறை, வழக்கறிஞர்களுக்கு என பார் கவுன்சில் உள்ளதுபோல பொறியாளர்களுக்கு என தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும். கட்டிட பொறியாளர்களுக்கு என தனியாக வாரியம் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...