பல்லடம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் பேருந்து நிலையம் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பேருந்துக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு எதிரே அரசு மதுபான கடை அமைந்துள்ளதால் நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் குடிபோதையில் தலைகால் தெரியாமல் வந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்களை ஆபாச வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

குடிபோதையில் இருந்த நபரை வீட்டுக்கு கிளம்புமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியும் அந்த நபர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிபோதையில் இருந்தவரை சரமாரியாக தாக்கினர். அதில் மயக்கமடைந்த நபரை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
பேருந்து நிலையத்திற்கு எதிரே குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பல்லடம் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு எதிரே அரசு மதுபான கடை அமைந்துள்ளதால் நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் குடிபோதையில் தலைகால் தெரியாமல் வந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்களை ஆபாச வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
குடிபோதையில் இருந்த நபரை வீட்டுக்கு கிளம்புமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியும் அந்த நபர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிபோதையில் இருந்தவரை சரமாரியாக தாக்கினர். அதில் மயக்கமடைந்த நபரை சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
பேருந்து நிலையத்திற்கு எதிரே குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பல்லடம் காவல்துறையினர் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.